Sunday, May 20, 2012

சே குவேரா தன் குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்...

1965,

என் குழந்தைகளுக்கு,

அன்புள்ள ஹில்டிட்டா, அலைடிட்டா, கியாமிலோ, ஏனெஸ்டோ, என்றாவது ஒரு நாள் நீங்கள் இக்கடிதத்தைப் படிக்க வேண்டி வந்தால் அதனுடைய பொருள் நான் உங்களை விட்டுப் பிரிந்துவிட்டேன் என்பதுதான்.

உங்களி்ல் யாருக்கும் என்னைப் பற்றி அவ்வளவு பெரிதாக ஒரு நினைவு இருக்காது. மிகவும் இளையவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்தே இருக்காது.

சரியென்று தோன்றுவதைச் செய்யவும் சொந்தக் கருத்துகளில் இருந்து எப்பொழுதும் மாறாமல் வாழ்ந்து வந்த ஒருவராயிருந்தார் உங்களுடைய அப்பா. நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வளர வேண்டும் என்பதுதான் இந்த அப்பாவின் விருப்பம். கருத்தூன்றிக் கற்கவும் கலையில் திறமை பெறவும் வேண்டும். புரட்சிதான் அனைத்திற்கும் மேலானது என்றும் எந்தத் தனிமனிதருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனிலும் முக்கியமானது அநீதியை எங்கு கண்டாலும் எதிர்க்க வேண்டும் என்பதுதான். ஒரு புரட்சிக்காரனுடைய மிகவும் முக்கியமான குணம் அதுதான்.

குழந்தைகளே, இந்த அப்பாவைப் போக அனுமதியுங்கள் . என்றாவது ஒரு நாள் சந்திக்க முடியும் என்று நம்பலாம்.

அப்பாவினுடைய முத்தங்களையும் அரவணைப்பையும் இத்துடன் அனுப்புகிறேன்.

என்றும்,

உங்கள் அப்பா.
( நன்றி- மு.ந.புகழேந்தி மொழிபெயர்த்த சே குவேரா எழுதிய கடிதங்கள் நூலிலிருந்து...)

No comments:

Post a Comment