Saturday, November 26, 2011

மூன்று கவிதைகள் - யாழினி முனுசாமி

1.
சூடுபட்ட பூனை
பயந்து பயந்து நெருங்குகிறது
பால் குண்டானை.

2.

இன்னும் புரியவில்லையெனக்கு
நீ
சாத்தானா
தேவதையா?

3.

யாசிக்கப்படாத யாசகங்கள்
அகால மரணமடைந்த
இளம்பெண்ணின் ஆவியைப் போல்
பெரும் ஏக்கத்தோடு
அலைந்துகொண்டிருக்கின்றன
மன அடவியில்.
-----------------------------------------------------------------




Wednesday, November 23, 2011

கவிதை - இரகசியக் கூழாங்கல் - யாழினி முனுசாமி

தியின் அடியாழத்தில் இரகசியமாய்ப்
பதிந்து கிடக்கும் சிறு கூழாங்கல்லில்
வளிநிரப்பினேன்.
பெரும்பலூனாய் மேலெழும்பித் 
தத்தளித்துக் கொண்டிருக்கிறது அலையில்.
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
ஒப்படைக்க அருகில் நெருங்கினால்
மீண்டும் கூழாங்கல்லாகி
அடியாழத்தில் பதிந்துவிடுகிறது.

Tuesday, November 22, 2011

கவிதை - விரகம் - யாழினி முனுசாமி

நகரம் இருளில் கரையத் தொடங்கிய
பின்மாலைப் பொழுதில்
சொற்களின்வழி அவன் கரையத் தொடங்குகிறான்.
அவனது சொற்களெல்லாம் 
அவளின் அன்பை இறைஞ்சுகின்றன.
அவளும் மெல்லக் கரையத் தொடங்குகிறாள்
அப்போது அவர்கள் உரையாடிக்கொண்டிருக்குமிடம்
தேவதைகள் உறையும் இடமாகிப்போனது.
அவள் தனது கனிவான சொற்களால்
அவன் மனத்தின் தீராப் பசியைக்
கொஞ்சம் கொஞ்சமாய்த் தணித்துக்கொண்டே
சொற்களால் கவசம் அணிந்துகொள்கிறாள்.
கொதித்துக் கொண்டிருக்கும்
உடலின் வாசனையை விழிகளில்
உணர்ந்த பின்னும்
                                                         அவரவர் திசையேகுகின்றனர்
                                                         விதிக்கப்பட்ட சட்டகங்களுக்கஞ்சி.
                                                          --------------------------------------------------------------



Wednesday, November 16, 2011

கவிதை - அன்புமுறி - யாழினி முனுசாமி

னைத் தூற்று
பழித்துப் பேசு
நான் பிறந்த சாதியை
இழித்துக் கூறு
கொஞ்சம் போல் அவமானப் படுத்து
எனது மனப் பறவையை
உனது பாழ்மண்டபத்தே
அண்டவிடாது துறத்து
கடுஞ்சொற்களால் காயப்படுத்து
என் காடு மணத்துக் கிடக்கும்
உன் மணத்தை
செத்துக் கிடக்கும் நஞ்சரவத்தின் நாற்றமாக்கு
எனை எனதாக்கு
நான் நானாக வாழவேண்டும்.