Monday, May 30, 2011

நூல் அறிமுகம் - தி. பரமேசுவரியின் ஓசை புதையும் வெளி

கவிஞர் தி.பரமேஸ்வரியின் இரண்டாவது கவிதை நூல் இது.
 முந்தைய தொகுப்பைவிட மொழி நடையும் அகம் சார்ந்த கவிதைகளும் 
பிரமிப்பை ஏற்படுத்துகிறது .பிறகு விரிவாக எழுதுகிறேன் . இப்போதைக்கு மூன்று கவிதைகளைப்  படிக்கத் தருகிறேன்...

குரலெனும் புயல் 

ஓசை காட்டி 
அழைக்கிறது மழை 
ஓடிப் பிடிக்க யத்தனிக்கையில்
எங்கேயோ உரத்து ஒலிக்கும் குரல்கள் 
கடும்புயலை நினைவூட்ட 
மனசுக்குள் மழை மறைந்து 
இறுக்கம் பரவுகிறது மெல்ல .
------------------------------------------------------------
துளிகளால் நனையும் பூமி 

அனைத்தையும் விட்டொழித்துத் 
திசைவெளிஎங்கும் பரவுகிறேன் 
மென்காற்றாய் 
மலை முகடுகளில் அலைகிறேன் 
மேகமாய் உருமாறுகிறேன் 
மெல்லக் கரைகிறேன் 
துளிகளால் நனைகிறது பூமி .
-----------------------------------------------------

மனப்பாறையில் சிதறும் பரல்கள் 

மண் மகள் அறியா
வண்ணச்சீரடிப் பாவை 
நிலம் அதிர நடக்கிறாள் 
ஒற்றைச் சிலம்புடன் .
அரண்மனைச் சீற்றப் பயணத்தில் 
மணப்பாறை அடுக்குப் பதிவுகள் 
விட்டுப் பிரிந்ததும் 
நேரவளைக் கலவியதும் 
குலப்பெருமை இழந்ததும் 
செல்வம் தொலைத்ததும் 
நடத்தி நடத்தி மதுரை கொணர்ந்ததும் 
திருட்டுப் பழியால் வுயிர் தொலைத்ததும் 
எண்ணும் பொழுதில் 
கசியும் குருதி 
நெஞ்சின் குமுறல் 
வெடித்தது பரல்களாய் .
விட்டெறிந்த ஒற்றை முலை 
பட்டுத் தெறித்தது பிணத்தில்,
எரிந்தது மதுரையும் ! 
------------------------------------------------------------------------------