கவிஞர் தி.பரமேஸ்வரியின் இரண்டாவது கவிதை நூல் இது.
முந்தைய தொகுப்பைவிட மொழி நடையும் அகம் சார்ந்த கவிதைகளும்
பிரமிப்பை ஏற்படுத்துகிறது .பிறகு விரிவாக எழுதுகிறேன் . இப்போதைக்கு மூன்று கவிதைகளைப் படிக்கத் தருகிறேன்...
குரலெனும் புயல்
ஓசை காட்டி
அழைக்கிறது மழை
ஓடிப் பிடிக்க யத்தனிக்கையில்
எங்கேயோ உரத்து ஒலிக்கும் குரல்கள்
கடும்புயலை நினைவூட்ட
மனசுக்குள் மழை மறைந்து
இறுக்கம் பரவுகிறது மெல்ல .
------------------------------------------------------------
துளிகளால் நனையும் பூமி
அனைத்தையும் விட்டொழித்துத்
திசைவெளிஎங்கும் பரவுகிறேன்
மென்காற்றாய்
மலை முகடுகளில் அலைகிறேன்
மேகமாய் உருமாறுகிறேன்
மெல்லக் கரைகிறேன்
துளிகளால் நனைகிறது பூமி .
-----------------------------------------------------
மனப்பாறையில் சிதறும் பரல்கள்
மண் மகள் அறியா
வண்ணச்சீரடிப் பாவை
நிலம் அதிர நடக்கிறாள்
ஒற்றைச் சிலம்புடன் .
அரண்மனைச் சீற்றப் பயணத்தில்
மணப்பாறை அடுக்குப் பதிவுகள்
விட்டுப் பிரிந்ததும்
நேரவளைக் கலவியதும்
குலப்பெருமை இழந்ததும்
செல்வம் தொலைத்ததும்
நடத்தி நடத்தி மதுரை கொணர்ந்ததும்
திருட்டுப் பழியால் வுயிர் தொலைத்ததும்
எண்ணும் பொழுதில்
கசியும் குருதி
நெஞ்சின் குமுறல்
வெடித்தது பரல்களாய் .
விட்டெறிந்த ஒற்றை முலை
பட்டுத் தெறித்தது பிணத்தில்,
எரிந்தது மதுரையும் !
------------------------------------------------------------------------------