Sunday, May 20, 2012

சே குவேரா நண்பருக்கு எழுதிய கடிதம் ...

                                                                                                    ஹவானா, 1959, பிப்ரவரி
                                                                                                    போசெ ஈ, மார்த்தி லேவா
                                                                                                    மர்த்தயேல் நம்பர் 180, 
                                                                                                    ஹொல்கிவின், ஒரியந்தே.

அன்புள்ள நண்பரே,

நம் அயல்நாடான, சாந்தோ தோ மிஸ்கோவிலுள்ள மக்களினுடைய சுதந்திரத்திற்காகப் போராடத் தயார் என்று நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி.

அந்த மகத்தான வார்த்தையை அதனுடைய முழுப் பொருளுடன் நான் கவனத்தில் எடுத்துக் கொண்டேன் என்பதை அறிவித்துக்கொள்கிறேன். இந்த உணர்ச்சியும் உறுதியும் குறைந்து விடாமல் எதிர்காலத்திற்காக அப்படியே வைத்திருங்கள். சந்தர்ப்பம் வரும்பொழுது பயன்படுத்தலாம்.இதற்கிடையில் பள்ளிக்கூடததில் உங்களுக்கு இருக்கும் கடமைகளைச் சரியாக நிறைவேற்றுங்கள். அதன் மூலம நாட்டிற்குப் பயனுள்ள ஒருவராக மாற முயற்சி செய்யுங்கள். அப்படிப்பட்டவர்கள்தான் இன்று கியூபாவிற்குத் தேவைப்படுகிறார்கள். நீங்கள் அப்படிப்பட்டவர்களில ஒருவராக இருப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படிப்பட்ட ஓர் உறுதிமொழியை எனக்குக் கொடுங்கள்.

டாக்டர் ஏனஸ்டோ சே குவேரா
கமாண்டர் இன் சீப்
மிலிட்டரி டிபார்ட்மெண்ட் ஆப் கபானா.

சே குவேரா தன் குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்...

1965,

என் குழந்தைகளுக்கு,

அன்புள்ள ஹில்டிட்டா, அலைடிட்டா, கியாமிலோ, ஏனெஸ்டோ, என்றாவது ஒரு நாள் நீங்கள் இக்கடிதத்தைப் படிக்க வேண்டி வந்தால் அதனுடைய பொருள் நான் உங்களை விட்டுப் பிரிந்துவிட்டேன் என்பதுதான்.

உங்களி்ல் யாருக்கும் என்னைப் பற்றி அவ்வளவு பெரிதாக ஒரு நினைவு இருக்காது. மிகவும் இளையவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்தே இருக்காது.

சரியென்று தோன்றுவதைச் செய்யவும் சொந்தக் கருத்துகளில் இருந்து எப்பொழுதும் மாறாமல் வாழ்ந்து வந்த ஒருவராயிருந்தார் உங்களுடைய அப்பா. நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வளர வேண்டும் என்பதுதான் இந்த அப்பாவின் விருப்பம். கருத்தூன்றிக் கற்கவும் கலையில் திறமை பெறவும் வேண்டும். புரட்சிதான் அனைத்திற்கும் மேலானது என்றும் எந்தத் தனிமனிதருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனிலும் முக்கியமானது அநீதியை எங்கு கண்டாலும் எதிர்க்க வேண்டும் என்பதுதான். ஒரு புரட்சிக்காரனுடைய மிகவும் முக்கியமான குணம் அதுதான்.

குழந்தைகளே, இந்த அப்பாவைப் போக அனுமதியுங்கள் . என்றாவது ஒரு நாள் சந்திக்க முடியும் என்று நம்பலாம்.

அப்பாவினுடைய முத்தங்களையும் அரவணைப்பையும் இத்துடன் அனுப்புகிறேன்.

என்றும்,

உங்கள் அப்பா.
( நன்றி- மு.ந.புகழேந்தி மொழிபெயர்த்த சே குவேரா எழுதிய கடிதங்கள் நூலிலிருந்து...)

Wednesday, May 2, 2012

தோழர் ரமணி அனுப்பியிருந்த மேநாள் வாழ்த்துச்செய்தி...!

1887 நியூயார்க் நகரின் வீதியிலே அமெரிக்க முதலாளிக்கு சாவு மணி அடிக்க திரண்டெழுந்த உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் போராட்டங்களில்,   8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்,  ஓய்வுநேரம் என்ற கோரிக்கை வைத்து வெடித்தெழுந்த வேலை நாள்.

எதிரியின் அடக்குமுறையால் துப்பாக்கிக்கு முகம் கொடுத்து தியாகம் செய்து  
 உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற மார்க்ஸ், லெனின் அறைகூவலுக்கு இணங்க முதலாளியத்தின் அதிகாரத்தை அடிபணிய வைத்து வெற்றி பெற்ற நாள் மே நாள்.

இன்றும் கால் சென்டர், பிபிஓ, ஐ.டி, வீட்டுவேலை செய்வோர், நவீனத்தின் காலடிச்சுவட்டிலும் உரிமையற்று இரவு பகல் உழைத்து உண்ண உணவின்றி தெருவோர, முட்டைத் தூக்கும் தொழிலாளர்கள், மாடி மேல மாடி ஏறி கலவை கலக்கி, செங்கல் தூக்கி, கட்டிடத்தின் உச்சியில் நின்று இழப்பதற்கு ஏதுமற்ற தொழிலாளியாய்  உயிரின் அச்சம் இன்றி உறங்கும் வரை வேலை செய்யும்  தொழிலாளி வர்க்கத்தின் உழைபபு மதிப்பையும் சமூக வளர்சசிக்கு அடித்தளம் மனித உழைப்பே என அறியும் நாள். 

செங்கொடி பிடித்து சிவ்ந்தெழுந்த நேரம் சிகரத்தின் உச்சியில் அச்செங்கொடி ஏறிய நேரம் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராய் நின்ற அதிகாரத்தை அதிரவைத்த நாள் மேநாள். 
 
அடுப்படியில் வேலை செய்து அமராமல் கணவனை அனுப்பி விட்டு தானும் வேலை க்கு செல்லும் இரட்டை உழைப்பாளியாய் திகழும் பெண் தொழிலாளர்களை நினைவுகூர்வோம். சமத்துவம் நோக்கி உழைப்பவர்க்கே அதிகாரம். என .