Saturday, November 26, 2011

மூன்று கவிதைகள் - யாழினி முனுசாமி

1.
சூடுபட்ட பூனை
பயந்து பயந்து நெருங்குகிறது
பால் குண்டானை.

2.

இன்னும் புரியவில்லையெனக்கு
நீ
சாத்தானா
தேவதையா?

3.

யாசிக்கப்படாத யாசகங்கள்
அகால மரணமடைந்த
இளம்பெண்ணின் ஆவியைப் போல்
பெரும் ஏக்கத்தோடு
அலைந்துகொண்டிருக்கின்றன
மன அடவியில்.
-----------------------------------------------------------------