Wednesday, July 13, 2011

எனக்குப் பிடித்த பாரதியின் கவிதை ...

படிக்கப் படிக்கப் புதிதாகத் தோன்றுபவன் பாரதி.
பாரதியின் பல கவிதைகள் நம்மை வெகுவாகக் கவர்பவை. எனக்குப் பிடித்த பல கவிதைகளில் ஒரு கவிதையை எங்கள் கல்லூரியில் சேர்ந்திருக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு முதல் வகுப்பில் படித்துக் காட்டினேன்.வேண்டுவன எனும் தலைப்பிலான அக்கவிதையை இங்கே தருகிறேன்.

னதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லன வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதிவேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காத்திட வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்
-------------------------------------------