Tuesday, November 22, 2011

கவிதை - விரகம் - யாழினி முனுசாமி

நகரம் இருளில் கரையத் தொடங்கிய
பின்மாலைப் பொழுதில்
சொற்களின்வழி அவன் கரையத் தொடங்குகிறான்.
அவனது சொற்களெல்லாம் 
அவளின் அன்பை இறைஞ்சுகின்றன.
அவளும் மெல்லக் கரையத் தொடங்குகிறாள்
அப்போது அவர்கள் உரையாடிக்கொண்டிருக்குமிடம்
தேவதைகள் உறையும் இடமாகிப்போனது.
அவள் தனது கனிவான சொற்களால்
அவன் மனத்தின் தீராப் பசியைக்
கொஞ்சம் கொஞ்சமாய்த் தணித்துக்கொண்டே
சொற்களால் கவசம் அணிந்துகொள்கிறாள்.
கொதித்துக் கொண்டிருக்கும்
உடலின் வாசனையை விழிகளில்
உணர்ந்த பின்னும்
                                                         அவரவர் திசையேகுகின்றனர்
                                                         விதிக்கப்பட்ட சட்டகங்களுக்கஞ்சி.
                                                          --------------------------------------------------------------