Sunday, July 17, 2011

என் கவிதை - என் செல்ல செல்லமே


என் செல்ல செல்லமே

ன் அசைவுகளில்
நிரம்பியிருக்கிறது
எனக்கான மகிழ்ச்சி
உன் பனிக்குழைவிதழில் முகிழ்க்கும்
குறுநகையும்
அன்பு குழைந்த பார்வையும்
மலர்த்திவிடுகிறதென்னை
நெற்றியிலும் கன்னத்திலும்
அனிச்சையாய் நீ
கைவைத்துக்கொள்ளும் அழகில்
கரைந்துபோகிறேன்.
பறவைகளின் பாடல்களில்
மனமொன்றி
மெல்லியதாய் நீ குரலெழுப்புகையில்
உயிருருகிப்போகிறேன்
விழியுருட்டி
நீ வேடிக்கை பார்க்கையில்
உன்னையே வியந்து பார்க்கிறேன்.
எப்போதாவது நேரும்
உன் சிறு துயரை
பொறுத்துக் கொள்ளவியலாமல்
உடைந்து போகிறேன்.
வலிகளை உடல்கடத்தும் அற்புதம்
ஏதும் நிகழுமாயின்
என்னுடல் கடத்திக்கொள்வேன்.
------------------------------------------------------