Monday, December 7, 2020

மீண்டும் வலைப்பூவில் ...

வலைப்பூவில் எழுதி சில ஆண்டுகள் ஆகின்றன.முகநூலுக்கு வந்த பிறகு வலைப்பூவில் எழுதுவது அறவே நின்றுவிட்டது,  முரண்களரி இணையதளம் தொடங்கலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தோழரிடம் கேட்டிருந்தேன். அதற்கான கட்டணமும் கட்டினேன். ஆனால் படைப்புகளை அனுப்பிச் செயல்படத் தொடங்கவில்லை. என்னிடம் வேலைமுறையில் ஒரு ஒழுங்கில்லை. முரண்களரி வலையொளி தொடங்கினேன். அதுவும் இப்போது தொய்வாக இருக்கிறது. இன்னும் கூடுதலாகச் செயல்படவேண்டும். அதற்கு மிகுந்த உற்சாகத்துடன் செயல்படும் மனம் நிலையாக இருக்க வேண்டும்.