Wednesday, May 2, 2012

தோழர் ரமணி அனுப்பியிருந்த மேநாள் வாழ்த்துச்செய்தி...!

1887 நியூயார்க் நகரின் வீதியிலே அமெரிக்க முதலாளிக்கு சாவு மணி அடிக்க திரண்டெழுந்த உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் போராட்டங்களில்,   8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்,  ஓய்வுநேரம் என்ற கோரிக்கை வைத்து வெடித்தெழுந்த வேலை நாள்.

எதிரியின் அடக்குமுறையால் துப்பாக்கிக்கு முகம் கொடுத்து தியாகம் செய்து  
 உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற மார்க்ஸ், லெனின் அறைகூவலுக்கு இணங்க முதலாளியத்தின் அதிகாரத்தை அடிபணிய வைத்து வெற்றி பெற்ற நாள் மே நாள்.

இன்றும் கால் சென்டர், பிபிஓ, ஐ.டி, வீட்டுவேலை செய்வோர், நவீனத்தின் காலடிச்சுவட்டிலும் உரிமையற்று இரவு பகல் உழைத்து உண்ண உணவின்றி தெருவோர, முட்டைத் தூக்கும் தொழிலாளர்கள், மாடி மேல மாடி ஏறி கலவை கலக்கி, செங்கல் தூக்கி, கட்டிடத்தின் உச்சியில் நின்று இழப்பதற்கு ஏதுமற்ற தொழிலாளியாய்  உயிரின் அச்சம் இன்றி உறங்கும் வரை வேலை செய்யும்  தொழிலாளி வர்க்கத்தின் உழைபபு மதிப்பையும் சமூக வளர்சசிக்கு அடித்தளம் மனித உழைப்பே என அறியும் நாள். 

செங்கொடி பிடித்து சிவ்ந்தெழுந்த நேரம் சிகரத்தின் உச்சியில் அச்செங்கொடி ஏறிய நேரம் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராய் நின்ற அதிகாரத்தை அதிரவைத்த நாள் மேநாள். 
 
அடுப்படியில் வேலை செய்து அமராமல் கணவனை அனுப்பி விட்டு தானும் வேலை க்கு செல்லும் இரட்டை உழைப்பாளியாய் திகழும் பெண் தொழிலாளர்களை நினைவுகூர்வோம். சமத்துவம் நோக்கி உழைப்பவர்க்கே அதிகாரம். என .