Saturday, June 2, 2012

வந்தேறு குடிகள் சிங்கவர்களே ...சிங்களவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன

வந்தேறு குடிகள் சிங்கவர்களே ஆதாரத்துடன் நிரூபிக்கத்தயார்! மேதானந்த தேரருக்கு விக்கிரமபாகு நேருக்கு நேர் சவால்
01 05 12
இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும்.

இவ்வாறு சிங்களவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் காரசாரமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

எல்லாவல மேதானந்த தேரர் ஒரு கல்விமானாக இருந்து கொண்டும், வரலாறு தெரிந்தும் சிங்கள மக்களைக் குஷிப்படுத்துவதற்கு போலிக் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு இதுதான் வரலாறு இதிகாசம் என்றும் சுட்டிக் காட்டுகின்றார்.இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இங்கு வந்த பின்னர்தான் பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது.மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் எல்லாவல மேதானந்த தேரர் இது விடயம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்குத் தயாரா?அவர் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என நான் சவால் விடுக்கிறேன். இப்படித் தெரிவித்தார் நவசமசமாஜக்கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுபினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தமிழ் மக்களை வாழ வைப்பதற்கு அல்ல அவர்களை அடக்கியாள்வதே இந்திய குழுவின் நோக்கம்
17 04 12
இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் உளவுபிரினராகவே இந்திய பாராளுமன்ற குழு விஐயம் அமைந்துள்ளது என நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை-கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்திய பாராமன்ற குழுவின் விஐயம் தமிழ் மக்களின் மீதுள்ள அக்கறையில்லை. ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவின் பாதுகாப்பதற்கே என தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரவளித்துள்ளமையால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக் குழு இங்கு வருகிறது.

இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி மஹிந்தவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் காணிகளை கொள்ளையடிப்பதே இக்குழுவின் திட்டம் என குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் மக்களை வாழ வைப்பதற்கு அல்ல அம்மக்களை அடக்கியாள்வதே இவ் விஜயத்தின் இலக்காகும். நஷ்டம் இலங்கை அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்வதாலும், அதன் ஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதாலும் இந்தியாவிற்கு பாரிய நஷ்டம் ஏற்படும். இதனால் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான உளவுப் பிவினரென்ற ரீதியிலேயே இக்குழுவின் விஐயம் அமைந்துள்ளது.

தமிழக முதலவர் ஜெயலலிதா எடுத்த முடிவினை பாராட்டிய விக்கிரமபாகு, தமிழர்களின் உணர்வுகளை தமிழ் நாட்டு மக்கள் வெளிப்படுத்தியமையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்குழுவின் விஜயத்தால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. மாறாக அம் மக்களின் வளங்கள் சூறையாடப்படவுள்ளதென்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழ் இணையங்கள் 


11111111111111111111111111111111111111


நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தாது!- விக்கிரமபாகு
22 11 2011
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது. அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப்படுத்தவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

போர்க்குற்றம் இழைத்தோருக்குக் கடும் தண்டனை என்ற போர்வையில் அவர்களை அனுசரிப்பதற்கு அரசு முயலுமே தவிர, தண்டனை என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான்.

கறைபடிந்த வரலாற்றுக்கு வெள்ளையடிக்கும் மஹிந்த அரசின் தந்திரங்களுள் முக்கியமானதொன்று தான் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சர்வதேசத்தின் கேள்விகளுக்குப் பதில் உண்டு என்றும், அந்த அறிக்கையை தாம் பகிரங்கப்படுத்துவோம் என்றும் அரச தரப்பினர் அங்கும் இங்கும் கூறித் திரிகின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் கடும் எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாகவே அரசு சர்வதேசத்தின் கேள்விகளுக்கு ஆணைக்குழு அறிக்கையில் பதில் அளித்துள்ளது.

எனினும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஒரு போதும் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தாது.

இந்தியாவையும், அமெரிக்காவையும் திருப்திப்படுத்தவே அரசு அறிக்கை தயாரித்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியான நிவாரணம் இதில் இல்லை.

அரசின் இன்றைய செயற்பாடுகள் சர்வதேசத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு அமையவே இருக்கின்றன.

வரவு செலவுத்திட்டம் கூட இந்தியா, அமெரிக்கா, உலக வங்கி ஆகியவற்றின் ஆலோசனைக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

நன்றி தமிழ் இணையங்கள்


(முகநூலில் ஈழ மகான் தமிழ் வெளியிட்டிருந்த செய்திகள் இவை - யாழினி முனுசாமி)