Tuesday, March 20, 2012

கவிதை - அவரின் புன்சிரிப்பு - பானு ஜியோத்சனாலஹரி

படுகொலை செய்யப்பட்ட தோழர் கிஷன்ஜியைப் பற்றிய கவிதை...


சித்திரவதைகள் முடிவுற்றன
அவர்களில்
 ஒருவன்
நிலம் நோக்கி உமிழ்ந்தான் வெறுப்புடன்


மேல் நோக்கி நிலைகுத்தி
நின்றது அவரது பார்வை


அவர்களும் பார்த்தார்கள்
சித்திரதை செய்யப்பட்ட
முகத்தின் ஓரத்தே
வழியும் இரத்தம்


அவர் இன்னமும் 
சிரித்துக் கொண்டே இருக்கிறார்.


அவர்களில் ஒருவன்
துவக்கை உறுவி எடுத்தான்
ஒருமுறை சுட்டான்
அவரின் புன்சிரிப்பை இலக்காக்கி
மேலும் ஐந்து துவக்குகள்
வதை முகாமின்
விளக்குகள் அணைந்தன


ஜன்னல் வழியே உற்றுப் பார்த்து
திகிலுற்றனர்
கிழக்கு சிவந்தது
அவரின் புன்சிரிப்பாய்!

( இக்கவிதையை எழுதியவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆய்வு மாணவர். ஜனநாயக மாணவர் சங்கப் பொறுப்பாளர்.)