Saturday, April 6, 2013

கவிஞர் ஏ.இராஜலட்சுமியின் நூலகள் வெளியீட்டு விழாப் புகைப்படங்கள்


கவிஞர் ஏ.இராஜலட்சுமியின் நூல்கள் வெளியீட்டு விழாப் படங்கள்


முரண்களரி படைப்பகத்தின் வெளியீடுகளான கவிஞர் ஏ.இராஜலட்சுமியின், “ஆக்கமும் பெண்ணாலே - பெண் படைப்பாக்க ஆளுமைகளின் உரையாடல்” , “நீயும் நானும் நாமும்” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா 31-03-2013 ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்றது.

பேராசிரியர் வீ.அரசு, சோகா இகேதா மகளிர் கல்லூரி தாளாளர் டாக்டர் சேது குமணன், சுண்டாட்ட உலக வாகையர் இளவழகி, பூவரசி இதழ் ஆசிரியர் கவிஞர் ஈழவாணி ஆகியோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். புதிய தலைமுறையில் பணிபுரியும் இ.இராஜீ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தோழர் கம்பீரன், தோழர் விசுணுபுரம் சரவணன், எழுத்தாளர் வெளி ரங்கராஜன், கவிஞர் சொர்ணபாரதி, கவிஞர் தமிழ்மணவாளன், கவிஞர் ஆசு , கவிஞர் பா.உதயகண்ணன், கவிஞர் சூரியசந்திரன், கவிஞர் பாரிகபிலன், எழுத்தாளர் உ.பா.,  கவிஞர் விஜேந்திரா...திரைப்பட நடிகர் சி்ங்கார சுகுமாறன்..முனைவர் மணிகோ.பன்னீர்செல்வம், கவிஞர் தர்மினி,  தோழர் தும்மா பிரான்சிஸ், கவிஞர் முத்துக்கந்தன், தோழர் ஆரணி இராமதாஸ், தோழர் ஜெயப்பிரகாசு நாராயணன், கவிஞர் பூபேசு, தோழர் பிரேம்,தோழர் பரிசல் செந்தில் நாதன், சோகா இகேதா கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், கவிஞரின் உறவினர்கள், என் குடும்பத்தினர்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மற்றும் பல நண்பர்கள் கலந்துகொண்டனர். (பெயர்  விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்) .

சிறப்பு விருந்தினர்களுக்கும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் முரண்களரி படைப்பகத்தின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தோழமையுடன் 
யாழினி முனுசாமி


No comments:

Post a Comment