Wednesday, March 28, 2012

யூமா வாசுகியின் இரண்டு கவிதைகள்...

யூமா வாசுகியின் கவிதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன்...அவருடைய கவிதைகள் குறித்து விரிவான கட்டுரை எழுத திட்டமிட்டுள்ளேன்.
இப்போதைக்கு இரண்டு கவிதைகளைப் படிக்கத் தருகிறேன்.

1.     த்தனைபேர்கூடி
        ரயிலுக்குக் காத்திருக்கையில்
        என்னிடம் மட்டும் பிரியம் வைத்து
        ஒரு காக்கை
        தலை தட்டிச் சென்றதும்
        கேன்டீனில் கொஞ்சம் தண்ணீர் வாங்கி
        சனி கழிய
        தலையில் தெளித்துப்போவென
        பரிவாகச் சொன்னாள் பெண்ணொருத்தி.

2.    பொழிகிற பெருமழையில்
       என் உப்புமூட்டை கரைகிறது
       சிறிது சிறிதாய்
       அமைத்த தடுப்புகளையெல்லாம்
       தகர்க்கும் நீர்ப்பெருக்கம்.
      கேட்டவர்க்குக் கொடுத்திருக்கலாம்
      கடந்த கோடையிலேயே.
-----------------------------------------------------------------