Friday, April 27, 2012



இன்று முகநூலில் படித்த சசிகலா பாபு கவிதை...

பேரன்பும் பெரும்பிரியமும் யாசித்த கைகளில்
அசூயையே எப்போதும் திணித்ததை அறிவீர்களா?

அழகான ஏதோ ஒன்று மலரும் வேளைதோறும்
கொடுவாள் கொண்டு வீசியதை அறிவீர்களா?

இவர்கள் இப்படி தானோயென ஐயம் கொள்ளும்வேளை
நாங்கள் அப்படித்தான் என கோரப்பல் காட்டியதை அறிவீர்களா?

அறிவோ திறமையோ அனைத்திற்குமான
உங்கள் பொது மதிப்பீடு இதுதானென கேலி செய்ததை அறிவீர்களா?

அடக்குதலும் வன்முறையும் அன்பாலும் நிகழ்த்த
இயலுமென நிரூபணம் செய்ததை அறிவீர்களா?

மலரினும் மெல்லிய எங்களை வெல்ல, உங்கள்
ஆயுதங்கள் கண்டு முறுவலிக்கிறோம் நாங்கள்....

இவை அனைத்தையும் "அறிந்துகொண்டு"!