நதியின் அடியாழத்தில் இரகசியமாய்ப்
பதிந்து கிடக்கும் சிறு கூழாங்கல்லில்
வளிநிரப்பினேன்.
பெரும்பலூனாய் மேலெழும்பித்
தத்தளித்துக் கொண்டிருக்கிறது அலையில்.
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
ஒப்படைக்க அருகில் நெருங்கினால்
மீண்டும் கூழாங்கல்லாகி
அடியாழத்தில் பதிந்துவிடுகிறது.