Tuesday, May 24, 2011

ஆனந்த விகடன் இதழில் (27 -04 -2011) வெளியான என் கவிதை - பாராட்டு விழா



து எதுக்கு 
யார் யார் 
யார் யாருக்கு நடத்தலாம்

சாதனையாளர்க்கோ
சமூகத் தொண்டர்க்கோ 
வீரர்க்கோ என்றில்லை 
யார் யார்க்கு வேண்டுமானாலும்
எதற்கு வேண்டுமானாலும் 
நடத்திக்கொள்ளலாம் 

அதிகம் கொலை செய்தவர்க்கு 
கொலைக்குத் துணை நின்றவர்க்கு 
கொலை செய்யப்பட்டவருக்கு 
பயன் பெற்றதற்கு
பயன் பெறுவதற்கு 
பிரபலமாவதற்கு 
விழா நடத்துவதற்கு 
மனத்தில் இடம் பிடிப்பதற்கு 
சும்மா பாராட்டுவதற்கு 
பாராட்டு விழா நடத்தியதற்கு 
சிலரைப் புறக்கணிப்பதற்கு 

பிறர்தான் நடத்தவேண்டுமென்பதில்லை
பிறர் பெயரில் 
நாமேகூட நடத்திக்கொள்ளலாம் 
அல்லது 
பிறரைத் தூண்டி 
நடத்திக்கொள்ளலாம் 

பாராட்டு விழாக்கள் 
பாராட்டுவதற்காக மட்டும் 
நடத்தப்படுவதில்லை !

நன்றி : ஆனந்த விகடன்  ( 27 - 04 - 2011 )