Thursday, March 24, 2011

மாறுவேடப் போட்டியில்   கலந்துகொள்ளும் 
                   அரசியல்வாதிகள்  

கலாச் சாலைச் சிறுவர்களினும் வெகு ஆர்வமாய்க் 
கலந்துகொள்கின்றனர் மாறு வேடப்போட்டியில் அரசியல்வாதிகள் .
நம் மூதாதையரை ஆண்ட அரசர்கள்  இரவில் 
மாறுவேடத்தில் நகர்வலம் வந்ததாகக் கதைகள் உலவுகின்றன.   
நவீன மன்னர்களோ எப்போதும் மாறுவேடத்தில் .
எல்லோர்க்கும் பிடித்த எளிதான மாறுவேடம் 
ரம்ஜான் நாளில் முஸ்லிமாக மாறிவிடுவது.
ஓரே  ஒரு குல்லாய் போதுமானது 
ஒட்டுமொத்த தேசத்திற்கே போட்டுவிட. 
அன்று முதல் இன்று வரை 
எல்லோர்க்கும் பிடித்த வேடம்
விவசாயி .
இவ் வேடத்தின் முதன்மைப் பொருள் கலப்பை.
உபரிப் பொருள்கள்,
முண்டா பனியனோ கை பனியனோ
அல்லது சட்டையோ . அவரவர் வசதிக்கேற்ப .
புரட்சியாளனாய் வேஷம் போடுபவர்கள்
தொண்டர்களிடம் ஈர்ப்பையும்
தோழர்களிடம் வெறுப்பையும்     உண்டாக்கி விடுகிறார்கள்.
உடல் முழுதும் கரு நீல வண்ணம் பூசி
கிருஷ்ணனாய் இராம லட்சுமணனாய் அனுமனாய்
வேடமிட்டு அலைகின்றனர்
வறுமை துரத்திய "ஹை-டெக்" மாநில விவசாயிகள் .
ஏதேதோ  வேடமிட்டு நம்பவைத்து
மக்களைப் பிசைக்காரர்களாக்கி விடுகிறார்கள்
அரசியல்வாதிகள்.

               பு ற்று நோய் தரும் மகிழ்ச்சி

     ராஜபக்சேவுக்குப் புற்று நோயாம் 
     இப்போதாவது   உணர்வானா
     மனிதவுயிரின்  அருமையை

 

Sunday, March 20, 2011


மௌனம் புதைந்த மனசு

அவர் கண்ணில் நீர்வழிந்து கொண்டேயிருந்தது. சிறு குழந்தையைப் போல் அவன் தோள் மீது சாய்ந்து அழத்தொடங்கினாள். தன் குடும்பத்தின் பழைய நிகழ்வுகளை நினைவு கூருகையில், இப்படி அழத்தொடங்கிவிடுவாள். உறவினர்கள் புறக்கணிப்பையும் ஏளனங்களையும் சிறுவயதிலிருந்து சேகரித்து வைத்திருக்கிறாள். ரணத்தின் வடுக்கள் அவள் மனதில் கிடங்கிட்டுக் கிடக்கின்றன. எப்போதாவது அதன்மீது கீறல் விழுகையில் அவளைச் சமாதானப்படுத்தித் தேற்ற சிலமணி நேரங்களாவது அவனுக்குத் தேவையாயிருக்கிறது. 
இன்றும் அப்படித்தான் ஆனது. அவன் மாமியார் ஏதோ பணம் கட்டிவிட்டுவர வங்கிக்குப் போகச் சொன்னதை மறுத்து, ‘உன் தம்பி என்ன செய்கிறான், அவனை அனுப்ப வேண்டியதுதானே?’ என்பதைத் தவிர பெரிதாக ஒன்றும் அவன் சொல்லிவிடவில்லை. சொல்லிமுடித்த சில நிமிடங்களுக்குள் துயரம் கனத்த மனத்துடன் வெளியே நின்றவள் சன்னலோரம் நின்று கொண்டு யாருக்கும் தெரியாமல் அழத்தொடங்கினாள். தற்செயலாக வெளியே வந்தவன் அவள் அழுவதைப் பார்த்து குழப்பத்துடன் அவளை நெருங்கிக் கேட்டான். அழுகையினூடே பேசத் துவங்கினாள். தொடர்ந்து படிக்க.....

குப்பை

அன்று ஞாயிற்றுக்கிழமை தன் வேலைகளில் மும்முரமாயிருந்தாள் நளினி. வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் மோகன். வழக்கம்போல் கணவனுக்கு காபியை கலந்து கொடுத்துவிட்டு மீண்டும் தன் வேலைகளில் ஈடுபட்டாள் நளினி. ‘குப்பை வண்டி’ யின் குரல் கேட்டதும் தன் சிந்தையை கலைத்தவன் உள்ளிருக்கும் நளினியை அழைத்தான். 


‘’குப்பை கொட்ட கூட நான்தான் வரணுமா? ஏன் நீங்க கொட்டக்கூடாதா? வீட்ல இருந்தா ஒரு சின்ன வேலை கூட செய்யக்கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன ‘’ என்று கோபப்பட்டவாறே வெளியில் இருக்கும் குப்பைக் கூடையைக் கொண்டு போனாள்.        தொடர்ந்து படிக்க....