Friday, April 20, 2012

விருதுகள் வழங்கும் இலக்கிய அமைப்புகளுக்கு சில வேண்டுகோள்கள்...

நண்பர்கள் ...தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்!

சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் இலக்கி அமைப்புகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்றாலும் சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ள விருப்புகிறேன். 

பரிசோ...விருதோ...படைப்பையும் படைப்பாளியையும் பரவலாகக் கவனப்படுத்துகிற ஒரு நல்ல முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பெரும்பாலான அமைப்புகள் அனைத்துப்பிரிவுகளுக்கும் பரிசு அறிவிக்கின்றன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரது நூல் மட்டுமே பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்யப்படுகின்றது. இரண்டாம் பரிசோ மூன்றாம் பரிசோ கிடையாது. ஆனால் போட்டிக்கு குறைந்த பட்சம் 3 நூல்களோ 4 நூல்களோ ஒவ்வொரு நூலிலும் அனுப்பவேண்டுகிறார்கள்.
தேர்வுக் குழுவினரில் அரசியல் பொறுத்தே நூலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்படியானால் பரிசுபெறாத நூல்கள் தரமற்றவையா? எந்தெந்த நூல்கள் போட்டிக்கு வந்தன என்ற தகவல்களோ...பதிவுகளோகூட கிடையாது. குறைந்த பட்சம் இந்தத் தகவல்களையாவது வெளியிட்டால் நூல் அனுப்பியதற்கான ஒரு பதிவாவது இருக்கும். அப்படி யாரும் செய்வதில்லை.எந்தெந்த நூல்கள் இறுதிப் போட்டியில் இருந்தன ..எந்தக் காரணத்திற்காக இந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற எந்தச் செய்திகளும் தெரிவிப்பதில்லை.
சிலர் தங்கள் குழுவைச் சேர்ந்தவர்களையே தேர்வுக் குழுவில் போட்டுவிட்டு தங்களுக்குத் தேவையானவர்களுக்கே பரிசுகளைக் கொடுத்துக் கொள்கிறார்கள். பிற படைப்பாளர்களுக்கான எந்த அங்கிகாரமோ பதிவோ இல்லாமல் செய்துவிடுகிறார்கள். போட்டியின் போது அனுப்பிவைக்கப்படும் நூல்களைப் பெற்றுக் கொண்டதற்கான எந்தத் தகவலையும் நூலாசிரியருக்கோ...பதிப்பாளருக்கோ தெரிவிப்பதில்லை.

சில ஆலோசனைகள்...

முதலில் நூல்களைப் பெற்றுக்கொண்டதும் தொலைபேசியிலோ...குறுஞ்செய்தியிலோ...மின்னஞ்சலிலோ...கடிதம் மூலமாகவோ தகவலைத் தெரிவியுங்கள்.

கவிதை ...சிறுகதை...நாடகம்...நாவல்...சிறுவர் இலக்கியம் ...மொழிபெயர்ப்பு என்று ஏதேனும் ஒரு பிரிவில் சிறந்த சில நூல்களுக்காவது பரிசளியுங்கள் (ஒரு ஆண்டில் ஒரு நூல்தானா சிறந்த நூலாக இருக்கிறதா?).

பரிசுத் தொகையை அதிகப் படுத்துங்கள்.

போட்டிக்கு வருகின்ற நூல்களின் பட்டியலையும் பதிப்பகங்களின் பட்டியலையும் வெளியிடுங்கள்.அந்தப் பதிவாவது அனுப்பப்படும் நூல்களுக்குக் கிடைக்கும்.அத்துடன் அந்த ஆண்டு வெளிவந்த நூல்பட்டியலாகவும் அது இருக்கும்தானே?

வெவ்வேறு சிந்தனைப் போக்கிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறவர்களைத் தேர்வுக் குழுவில் போடுங்கள்.

குறிப்பு...

முரண்களரி படைப்பகத்தில் வெளிவந்த ஆறுபேருடைய புத்தகங்களை
ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களைப் பல்வேறு பரிசுப் போட்டிகளுக்கு அனுப்பிவிட்டு எந்தப் பதிவும் இல்லாமல் இருப்பது கொடுமையாக இருக்கிறது நண்பர்களே!

முக்கிய முடிவு...

அடுத்த ஆண்டுமுதல் நாமும் விருது கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டியதுதான்...

அப்படியில்லையென்றால்...
எந்தப் போட்டிக்கும் இனி நூல்களை அனுப்பக் கூடாது!

2 comments:

  1. உண்மையான ஆதங்கம் .. புரிகிறது… நல்ல முடிவு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

      Delete