சாதிவெறி எதிர்ப்புக் கவிதை - இரண்டு
---------------------------------------------------------
நத்தம் காலனி
அண்ணா நகர்
கொண்டாம்பட்டி
செங்கல்மேடு
மனிதம் புதைக்கப்பட்ட சுடுகாடு.
அப்பு பாலனும்
அவர்தம் அருமைத்தோழர்களும்
செந்குருதி சிந்தி புரட்சிவிதை ஊன்றிய மண்ணில்
சுயநலச் சாக்கடை பாய்ச்சி
வளர்க்கிறாய் சாதிவெறியை.
நீ நினைக்கிறாய் அழித்துவிட்டதாக
உயிர்க்கிறது பாரீர்
அப்பு பாலனின் தியாகங்கள்.
---------------------------------------------------------
சா.எ.க .- மூன்று
முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும்
தமிழ்ச்சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கும்
சாதிவெறிப் பித்தர்களே
சுயநல அரசியல் அநாகரிகங்களே
உமது பித்துத் தெளிய
படியுங்கள்
பெரியாரை
அம்பேத்கரை
காரல் மார்க்ஸை.
-------------------------------------------------------------
சா.எ.க. - நான்கு
தன்னை எரித்து
தமிழின உணர்வைக் கிளர்த்தினான்
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்
நும் சகோதரனின் வீட்டை எரித்து
சாதிவெறியை மலர்த்தியிருக்கிறீர் நீங்கள்.
---------------------------------------------------------------
No comments:
Post a Comment