Thursday, November 9, 2017

கவிதை - யாழினி முனுசாமி

மழை நாளின் சித்திரங்கள்
-----------------------------------

பெருங்கூடுகளாயிருந்த மரங்கள்
பெயர்ந்து கிடக்கின்றன
கூடிழந்த பறவைகள்
எங்குச் சென்றிருக்கும்?

திண்ணையும்
தொழுவமுமில்லா
வீடுகளாலான இம்மாநகரில்
என்ன செய்யும்
தெரு நாய்களும் பூனைகளும்?

குளிருக்கிதமாய்த் தேநீர் பருகப் பால் தரும்
புறநகர் கோமாதாக்கள்
இக்கடுங்குளிரில் எங்கு நடுங்கிக்கொண்டிருக்கும்?

மனிதர்கள் குறித்தே
கவலைகொள்ளாத இத் தேசத்தில்
மரங்கள் குறித்தும்
பறவைகள் குறித்தும்
விலங்குகள் குறித்தும் கவலைப்பட
யாரிருக்கிறார்கள்?

- யாழினி முனுசாமி
06-11-2017

No comments:

Post a Comment